குடும்ப அரசியல் நடத்தி வரும் காங்கிரஸ் கட்சியால், நாட்டில் ஜனநாயகத்தை வளர்க்க முடியாது என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஜவர்ஹலால் நேரு, இந்தியா, சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, வருங்காலத்திலுள்ள பெயரை நான் குறிப்பிடவில்லை.
காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் எந்தவொரு கேள்வியும் எழுப்ப முடியாது. இதுபோன்ற கட்சிகளால் நாட்டின் ஜனநாயத்தை வளர்த்து, அதற்கான நோக்கத்தை நிறைவேற்ற முடியாது.
உள் ஜனநாயகம் இல்லாதபோது, எப்படி நாட்டின் ஜனநாயத்தை வலிமைப் படுத்த முடியும். ஒரேயோரு குடும்பம் பட்டும் 55 வருடம் நாட்டை ஆண்டுள்ளது. ஆனால், நாடு அடைந்தது என்ன?’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.





