மூதூர் பிரதேச செயலக பிரிவின் தோப்பூர்,பாலத்தோப்பூர்,ஆசாத் நகர்,கூர்கண்டம்,இக்பால் நகர்,58,59 ஆகிய பகுதிகளில் கொங்ரீட் வீதிகள் உள்ளிட்ட இன்னும் பல பகுதிகளிலும் புதிய வீதிகள் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
பல மில்லியன்கள் ரூபா செலவில் அமுல்படுத்தப்பட்ட இக் குறித்த அபிவிருத்திப் பணிகள் கிராமிய அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் நோக்கில் நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்களாகும்.
மக்கள் பிரச்சினைகளை ஆராய மக்கள் சந்திப்புப் குறித்த ஒவ்வொரு பகுதிகளிலும் இடம் பெற்றது.
குறித்த அபிவிருத்தி திட்டங்கள் கம்பரெலிய, கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி விசேட நிகழ்ச்சித் திட்டம், நீண்டகாலம் இடம் பெயர்ந்தோரை மீள்குடியேற்றுவதற்கான திட்ட முகாமைத்துவ அலகு உள்ளிட்ட திட்டங்கள் ஊடாக பிரதியமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் நடை முறைப்படுத்தப்பட்டன.
தோப்பூர் ஜூனியர் கனிஷ்ட வித்தியாலய குறைபாடுகள், மஸ்ஜித் நூர் பள்ளிவாயல் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடல் இடம் பெற்று விரைவான தீர்வுகளை பெற்றுத் தருவதாகவும் பிரதியமைச்சர் இதன் போது தெரிவித்தார்.
அ .அச்சுதன்





