LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, February 28, 2019

தென்னாப்பிரிக்காவில் பொதுத்தேர்தல் அறிவிப்பு!

தென்னாப்பிரிக்காவில் எதிர்வரும் மே மாதம் 8ம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி சிரில் ரமபோசா அறிவித்துள்ளார்.

1994 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக் கொள்கை முடிவுற்ற பிறகு, ஜனநாயகப்பூர்வமான முறையில் தேர்தல்கள் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

நாடாளுமன்ற கீழ் சபையில் (தேசிய சபை) பெரும்பான்மை பெறும் கட்சியின் தலைவரே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

அவ்வகையில் மே 8 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக, அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி தேசிய சபை கலைக்கப்பட்டது. அதன் பின்னர் தேர்தல் நடைமுறைகள் ஆரம்பமாகியுள்ளன.

இந்நிலையில், மே 8 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதாக ஜனாதிபதி முறைப்படி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குகளை போடுவதற்கு ஏதுவாக, அந்நாளை பொது விடுமுறையாக அறிவித்தும் உத்தரவிட்டுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7