வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களிற்கு பல்கலைக்கழக மாணவர்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1000 பாடசாலை மாணவர்களிற்கு இன்றைய தினம்(வெள்ளக்கிழமை) இவ்வாறு யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் உதவி வழங்கி வைக்கப்பட்டது.
லண்டனிலுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் குறித்த உதவிகள் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் மாணவர் ஒன்றியத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த உதவிகள் 75 முன்பள்ளி மாணவர்கள் மற்றும், தரம் ஒன்று முதல் உயர் தரம் வரை கல்வி கற்கும் மாணவர்களிற்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஏனைய தெரிவு செய்யப்பட்ட கிராமங்களிலும் இவ்வாறு பல்கலைக்கழக மாணவர்களால் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





