2019 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டப் பிரேரணையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று(வெள்ளிக்கிழமை) கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.
இதில், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ கலந்துகொள்ளவில்லை என்பதுடன், எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் சிலர் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
இதன் போது எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா பதவிகளுக்கு நியமிக்கப்பட்டவர்களில் எந்தவித மாற்றங்களும் இல்லை என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இதேவேளை, மாகாணசபைத் தேர்தலை மிக விரைவில் நடத்துவது தொடர்பிலும் கட்சித் இந்த கூட்டத்தின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், 2019 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டப் பிரேரணையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி சமர்ப்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த, வரவுசெலவுத் திட்ட பிரேரணை தொடர்பில் எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.





