தேசியளவில் பாடசாலைகளூடாக முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு கடந்த 5 நாட்களாக நடைபெற்றன. இறுதிநாளான வெள்ளியன்று ஊடகவியலாளர்களையும் ஊடகத்தையும் சம்பந்தப்படுத்தி இவ்விழிப்புணர்வுநிகழ்வுகள் நாடுபூராகவும் இடம்பெற்றன. இதனடிப்படையில் மூதூர் கல்வி வலயப்பிரிவில் உள்ள கட்டைபறிச்சான் விபுலாந்தாவித்தியாலய மாணவர்கள் முன்னெடுத்த விழிப்புணர்வு நிகழ்வுகளில் அரங்காற்றுகை மூலமான தெளிவு படு;த்தல் முக்கியம்வகித்தது.
இங்கு வீரகேசரி,தினக்குரல் உள்ளிட்ட ஊடகங்களின் ஊடகவியலாளர்களும் தெளிவுகளை மணவர்களுக்கு வழங்கியிருந்தனர். அதிபர்.பு பிரபாகரன் தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அரகாற்றுகையாளர் ஜனோபன்,சமயப்பெரியார்கள் கலாபூசணம் க.செல்வநாயகம்.கலாசார அதிகாரி க.அன்பழகன் உள்ளிட்ட பெருமளவிலானோர் பங்கு பற்றியிருந்தனர்
இங்கு நடைபெற்ற மாணவர்களின் அரங்காற்றுகையையும் அதிதிகள்,ஊடகவியலாளர்கள்,மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டிருப்பதனையும் படங்களில்காண்க





