ஒரு காலத்தில் திருகோணமலை மாவட்ட அரச,அரச சார்பற்ற நிறுவனங்கள் சம்பூரில் நிலை கொண்டிருந்த விடுதலை நோக்கம் கொண்டிருந்த இளைஞர்களின் கட்டுப்பாட்டிலிருந்ததோடு தமிழருக்கான பண்பாடு, நல்லொழுக்கம், கல்வி போன்ற பல விடயங்கள் அவர்களால் போதிக்கப்பட்டு செவ்வனே நடைமுறைப்படுத்திய வாழ்வியலுக்குள் இப்பகுதியிலுள்ளோர் வாழ்ந்திருந்தார்கள் என்பதை இவ்விடத்தில் நினைவு கூறுவது பொருத்தமென சம்பூர் -சூடைக்குடா, சந்தனவெட்டை கிராமங்களில் வாழும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கும் ,வறிய மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வில் (23) கலந்து கொண்டு திருகோணமலை மாவட்ட பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நிதியத்தின் தலைவரும், எழுத்தாளருமான கனகசபை தேவகடாட்சம் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர் தமிழருக்கான அனைத்து வாழ்வியல் பாடங்கள் ஏற்கனவே விடுதலை நோக்கம் கொண்ட இளைஞர்களால் போதிக்கப்பட்டு விட்டன.அந்த நெளிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடித்து எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.தமிழர்களின் வரலாற்று ஆதாராகளை சம்பூர் -சூடைக் குடாவில் அழிக்க முற்படும் எந்த சக்திகளுக்கும் இடம் கொடாது எமது வரலாற்று உண்மைகளை அறிந்து இங்குள்ள இளைஞர்கள் அறிவுபூர்வமாக ஏனைய சமூகங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.எமது அனுதாபங்களைக் கூறி அனுகூலம் பெறுவதைவிடுத்து, எமது சுயங்களை இழக்காது எமது கால்களிலே நின்று பொருளாதாரத்திலும், உயர் கல்வியிலும் உயர்வடைந்து சிறந்த வாழ்க்கை முறையை அமைத்து சூபீட்சமடைய எல்லோரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார்.
அ . அச்சுதன்

தொடர்ந்து உரையாற்றிய அவர் தமிழருக்கான அனைத்து வாழ்வியல் பாடங்கள் ஏற்கனவே விடுதலை நோக்கம் கொண்ட இளைஞர்களால் போதிக்கப்பட்டு விட்டன.அந்த நெளிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடித்து எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.தமிழர்களின் வரலாற்று ஆதாராகளை சம்பூர் -சூடைக் குடாவில் அழிக்க முற்படும் எந்த சக்திகளுக்கும் இடம் கொடாது எமது வரலாற்று உண்மைகளை அறிந்து இங்குள்ள இளைஞர்கள் அறிவுபூர்வமாக ஏனைய சமூகங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.எமது அனுதாபங்களைக் கூறி அனுகூலம் பெறுவதைவிடுத்து, எமது சுயங்களை இழக்காது எமது கால்களிலே நின்று பொருளாதாரத்திலும், உயர் கல்வியிலும் உயர்வடைந்து சிறந்த வாழ்க்கை முறையை அமைத்து சூபீட்சமடைய எல்லோரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார்.
அ . அச்சுதன்






