(பாண்டி)
பிளாஸ்ரிக் பாவனையற்ற பிரதேசமாக பாசிக்குடா கடற்கரையினை பாதுகாப்பது தொடர்பான பிரகடன நிகழ்வு இன்று காலை பாசிக்குடா சுற்றுலா அதிகார சபை விடுதியில் இடம்பெற்றது.
சூழல் பாதுகாப்பு அதிகார சபை,கோறளைப்பற்று பிரதேச சபை,மற்றும் பாசிக்குடா சுற்றுலா விடுதிகள் உரிமையாளர் சங்கம் ஆகியன இணைந்து இன்று ஜனவரி தொடக்கம் பாசிக்குடா கடற்கரையினை பிளாஸ்ரிக் பாவனையற்ற வலையமாக பிரகடனப்படுத்தும் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
குறித்த வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்க்கு கோறளைப்பற்று பிரதேச சபை,சுற்றுலா அதிகார சபை கல்குடா பொலிசார், வனஜீவராசிகள் திணைக்களம்,மின்பிடி திணைக்களம் மற்றும் இலங்கை வங்கி ஆகியவயாற்றின் உயர் அதிகாரிகள் நிகழ்வில் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
எதிர்காலத்தில் முற்றாக பிளாஸ்ரிக் இல்லாத பச்சை அல்கா கடற்கரை பிரதேசமாக மாற்றுதல் என்ற கருப்பொருளை முன்னெடுத்து செல்லவுள்ளதாக இதன் போது கருத்து தெரிவிக்கப்பட்டது. மாவட்ட கடல் சுற்றாடல் உத்தியோகஸ்த்தர் ரி.தயாரூபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கோறளைப்பற் பிரதேச சபை திவசாளர் திருமதி. சோபா ஜெயரஞ்சித்,வட-கிழக்கு கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபை உதவி முகாமையாளர் ரி.சிறிபதி,இலங்கை வங்கி பிராந்திய முகாமையாளர் எஸ். தயாழநேசன், கல்குடா கிராமசேவகர் க.கிருஷ்ணகாந்தன்,வாழைச்சேனை மீன்பிடி திணைக்கள முகாமையாளர் எஸ்.ஜெயரூபன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.கோறளைப்பற்று தவிசாளர் திருமதி. சோபா ஜெயரஞ்சித் பின்வருமாறு கருத்து தெரிவித்தார். எதிர்வரும் காலத்தில் பிளாஸ்ரிக் அற்ற இடமாக பாசிக்குடா கடற்கரையை மாற்றுவதே எமது குறிக்கோளாகும்.