புது வருடத்தை முன்னிட்டு திருகோணமலை நகரசபை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் நகரசபையின் வளாகத்தில் மரம் நடும் நிகழ்வு நேற்று (01) இடம்பெற்றது.
இந் நிகழ்வில் நகரசபைத் தலைவர் நா. இராசநாயகம் , செயலாளர் தே. ஜெயவிஷ்ணு ,பிரதம நூலகர் க . வரதகுமார், நூலகர் சி. கேசவச்செல்வி மற்றும் நூலக உத்தியோகத்தர்கள் மரம் நடுகையில் ஈடுபட்டனர்.