
சிரியாவின் Latakia பகுதியில் இன்று(செவ்வாய்கிழமை) இந்த கார் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்களை இலக்கு வைத்தே இந்த கார் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரையில் எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.





