குறித்த ஒப்பந்தம் தொடர்பான விசேட கற்கையினை மேற்கொண்டு அறிக்கையினை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட சுயாதீன நிபுணர்களின் குழு இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலத்தில் வைத்து ஜனாதிபதியிடம் குறித்த அறிக்கையைக் கையளித்தனர்.
இக் குழுவின் தலைவரான கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ஒய்வுபெற்ற பொருளியல்துறை பேராசிரியர் தேசமான்ய டபிள்யு.டி.லக்ஷமன் அவர்களினால் அவ்வறிக்கை ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், அக்குழுவின் ஏனைய அங்கத்தவர்களும் இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்.