திருகோணமலை வடக்கு எல்லையில் உள்ள தென்னமரவாடி என அழைக்கப்படும் தென்னவன் மரவு அடிக் கிராமத்தில் அமைந்துள்ள கந்தசுவாமி மலைபகுதியில் சட்டவிரோதமாக கட்டடம் அமைக்கப்படுகிறது.இதனால் அக் கிராமத்தின் மக்கள் பெறும் அச்சத்துடன் உள்ளனர் இதன் நோக்கம் பெளத்த விகாரைக்கான அடித்தளம் என்பதே மக்களின் அச்சத்திற்கான காரணமாகும் என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளரும், திருகோணமலை நகரசபை உறுப்பினருமான சி. சிவகுமார் (சத்தியன்) கண்டனம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..
இந்த கிராம மக்கள் மூன்று தடவைகள் பெளத்த விகாரை அமைப்பதற்கான முயற்சியில் இறங்கியவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்துள்ளனர். அதன் மாற்று சூழ்ச்சியாக தொல்பொருள் ஆராய்ச்சி என பெயர் பலகை அவ்விடத்தில் மாட்டப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத கட்டடம் இவ் பெயர் பலகை மாட்டப்பட்டுள்ள இடத்திலே அமைக்கப்படுகின்றது.


எனவே இவ் முயற்சியை தடுத்து நிறுத்த தமிழ் உணர்வாளர்கள் முன்வர வேண்டும் என திருகோணமலை நகரசபை உறுப்பினர் சத்தியன் தெரிவித்தார்.
அ . அச்சுதன்
