LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, December 27, 2018

பாண்டிருப்பு கடற்கரை வீதி 86 இலட்சம் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்டவுள்ளது.

கடந்த 2004 இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் மிகவும் மேசமாகப்பாதிக்கப்ட்ட நிலையில் குன்றும் குழியுமாக காட்சியளிக்கும் பாண்டிருப்பு கடற்கரை வீதியானது 86 இலட்சம் ரூபா செலவில் புனரமைப்புச் செய்யப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கல்முனை மாநகர சபையின் ஜக்கியதேசியக் கட்சி உறுப்பினர் திருமதி விநாயகமூர்த்தி தலைமையில் நடைபெற்றுள்ளது.

பாண்டிருப்புக் கிராமத்தின் சார்பில் ஜக்கியதேசியக் கட்சியின் பெண் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்ட விநாயகமூர்த்தி புவனேஸ்வரி முதல்வர் றக்கீப் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் ஆகியோரூடாக விடுத்த வேண்டுகோளுக்கமைய  நகர திட்டமிடல் நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப்ஹக்கீம் ஊடாக  இந் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநகரசபை உறுப்பினர் விநாயகமூர்த்தி புவனேஸ்வரியின் தலைமையில் கடற்கரைவீதிக்கான அடிக்கல் நாட்டு விழா வெகுவிமர்சையாக பாண்டிருப்பில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக அமைச்சர் ரவூப்ஹக்கீம் கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டார். அத்துடன் மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப், பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஸ், மாநகர ஆணையாளர் எம்.சீ.அன்வர், பொறியியலாளர்சர்வானந்தா  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜக்கியதேசியக் கட்சியின் பெண்வேட்பாளரான திருமதி விநாயகமூர்த்தி புவனேஸ்வரி ஏற்கனவே பாண்டிருப்பில் 60 இலட்சம் ரூபா செலவில் ஆறு வீதிகளை புனரமைப்புச் செய்துள்ளார். அத்துடன் மின்விளக்குகள் பலவற்றையும் பொருத்திவருகின்றார். இவரது கணவர் ஜக்கியதேசியக் கட்சியின் பாண்டிருப்பு இணைப்பாளர் விநாயகமூர்த்தியினால் பாண்டிருப்பில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் மீளக்குடியேறி வசித்துவரும் மேட்டுவட்டை வீட்டுத் திட்டத்தில் ஒரு கோடிரூபா செலவில் காபட் வீதி அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


அன்னமலை  நிருபர்



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7