
இந்நிலையில், அக் கல்லூரியின் கல்விகற்றுவரும் 7 ஆவது மாணவர் கைது செய்யப்பட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை சென்.மைக்கேல் தனியார் பாடசாலையில் தாக்குதல் மற்றும் பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் 7 ஆவது மாணவனும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு முதலில் கைது செய்யப்பட்ட 6 மாணவர்களும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
குறித்த பாடசாலை மாணவர் குழுவொன்று சக மாணவர்களை பாலியல் ரீதியாகவும் வேறு வகையிலும் துன்புறுத்தி, அதனை ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
