
கியூபெக்கில் பிரெஞ்சு பேசுபவர்களை எவ்வாறு ஆதரிப்பது என்பது குறித்து விவாதிக்கும் வகையில் முக்கிய கூட்டாட்சி எதிர்க்கட்சிகள் பிரதமருடன் நேற்று (புதன்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தியிருந்தன.
நான்கரை மணித்தியாலங்களாக நீடித்த பேச்சுவார்த்தை எவ்வித உறுதியான முடிவுகளும் எட்டப்படாத நிலையிலேயே நிறைவடைந்துள்ளது.
எனினும், குறித்த பேச்சுவார்த்தை நட்பு ரீதியாகவும், பாகுபாடற்ற வகையிலும் இடம்பெற்றிருந்ததாக கூட்டத்தில் கலந்துக் கொண்டிருந்தவர்கள் தெரிவித்திருந்தனர்.
ஜஸ்ரின் ட்ரூடோ பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர்இவ்வாறானதொரு சந்திப்பு இடம்பெற்றிருந்தமை இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
