LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, November 30, 2018

ஒரே குடும்பத்துக்கு கலைஞர் கௌரவமும் ஏழு பரிசில்களும் வழங்கி கௌரவிப்பு

(முர்ஷீத்)
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக கலாசார அதிகார சபை மற்றும் கலாசாரப்பேரவை இணைந்து நடாத்திய பிரதேச இலக்கிய விழாவில் மூன்றாவது முறையும் ஒரே குடும்பத்துக்கு கலைஞர் கௌரவமும் ஏழு பரிசில்களும் கிடைக்கப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று பிரதேச கலாசார பேரவைத் தலைவரும், பிரதேச செயலாளருமான வ.வாசுதேவன் தலைமையில் பேத்தாழை குகநேசன் கலாசார மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏ.ஜெயரஞ்சித், திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், ஜெ.அம்றிதா, ஜெ.அத்விஹா ஆகிய நால்வருக்கும் எழுத்துத்துறைக்கான கலைஞர் கௌரவமும், கட்டுரை, பாடல் நயத்தல், பாடலாக்கம், நாட்டார்கலை கற்றல் போட்டிகளுக்காக ஏழு வெற்றிப் பாராட்டுப் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.






 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7