(முர்ஷீத்)
கோறளைப்பற்று வாழைச்சேனை செயலக கலாசார அதிகார சபை மற்றும் பிரதேச கலாசார பேரவைத் தலைவரும், பிரதேச செயலாளருமான வ.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிதத்hர்.
அதிதிகளாக் எம்.ஏ.சி.ஜெயினுலாப்தீன், வாழைச்சேனை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தன், மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தர், செயலக கணக்காளர் திருமதி.டிலானி ரேவதன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவநேசராஜா, செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச கலைஞர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது பிரதேச செயலக கலாசார அதிகார சபையினால் முதலாவது மலராக புதிய மழை நூலும், பிரதேச கலாசாரப் பேரவையால் பதினான்காவது தடவையாக இளம்பரிதி நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதன் முதல் பிரதியை பிரதேச செயலாளர் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கு வழங்கி சம்பிரதாயபூர்வமாக வெளியிட்டு வைத்தார்.
மேலும் பிரதேச இலக்கிய விழாவினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், பிரதேச மூத்த எழுத்தாளர்களுக்கு நினைவுச் பரிசில்கள் வழங்கி கௌரவம் வழங்கப்பட்டது.
அத்துடன் பிரதேச மூத்த கலைஞர்கள் மூவரும், இளம் கலைஞரும் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், மாணவர்களின் கிராமிய நடனம், பரதம், நாட்டார் பாடல் போன்ற கலை நிகழ்வுகள் இடம்பெற்றது.
