LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, November 30, 2018

வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் பரிசளிப்பு விழா


                                                (எஸ்.எம்.எம்.முர்ஷித்)
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் பரிசளிப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை காலை பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் கலந்து கொண்டார்.

மேலும் அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.எஸ்.உமர் மௌலானா, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜீத், மட்டக்களப்பு மத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.அஜ்மீர், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ் உட்பட கல்வி அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது 2016ம், 2017ம் ஆண்டுகளில் வகுப்பு ரீதியாக இறுதி தவணைப் பரீட்சையில் முதலாம், இரண்டாம், மூன்றாம் நிலை பெற்ற மாணவர்கள், அதிகூடிய வரவுள்ள மாணவர்கள், பாடங்களில் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்தோடு 2010ம் ஆண்டு தொடக்கம் 2017ம் ஆண்டு வரை சாதாரண தரப் பரீட்சையில் அதிதிறமை சித்தி பெற்ற மாணவர்கள், 2010ம் ஆண்டு தொடக்கம் 2017ம் ஆண்டு வரை பல்கலைக் கழகம் சென்ற மாணவர்கள், 2010ம் ஆண்டு தொடக்கம் 2017ம் ஆண்டு வரை கல்விக் கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் ஆகியோருக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு பாடசாலை மாணவர்களினால் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், அதிதிகளுக்கும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.























 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7