LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, November 30, 2018

மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு பொலிசார் சுட்டுக்கொலை பொலிஸ் மா அதிபர் உட்பட உயரதிகாரிகள் குழு மட்டக்களப்பு நோக்கி விஜயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திவதற்காக பொலிஸ் உயரதிகாரிகள் குழுவொன்று மட்டக்களப்பு நோக்கி சென்றுள்ளனர்.
அந்தக் குழுவில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரஇ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர ஆகியோரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் அவர்கள் மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.
ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விஷேட பொலிஸ் குழுவொன்று மட்டக்களப்புக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வவுணதீவு வலையிறவு பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் இரவு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் இன்று அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7