LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, November 24, 2018

மன்னார் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்

மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 27ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

பலத்த மழை காரணமாகவும் மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ வெளிநாடு சென்றதாலும் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

பணிகள் இடைநிறுத்தப்படும் வரை 231 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்தார்.

இவற்றில் 18 சிறுகுழந்தைகளின் எலும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறு மீட்கப்பட்ட அனைத்து மனித எச்சங்களும் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மன்னார் சதொச கட்டட வளாகத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் கட்டட நிர்மாணப் பணிகளுக்காக நிலம் தோண்டிய போது இந்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் கடந்த வருடம் மே மாதம் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

இந்த பணிகளில் மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட சட்ட வைத்திய அதிகாரிகள் குழுவினரும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆகியோரும் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தகக்து.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7