LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, October 1, 2020

எமது சிறுவர்கள் எம்மிடம் வந்து சேரும் வரை சிறுவர்கள் தினம் கரி நாளே – காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்

வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது சிறுவர்கள் எமது கைவந்து சேரும் வரை சிறுவர்கள் தினம் எமக்கு கரி நாளே என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார்.
திருக்கோவில் பிரதேசத்தில் சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
10 வருடத்திற்கு முன்னர் யுத்தத்தின்போது சரணடைந்த எங்கள் குழந்தைகள் எங்கே?, சிறுவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய இலங்கை அரசு எமது சிறார்களை காணாமலாக்கியுள்ளது, இவ்வாறு காணாமலாக்கப்பட்ட குழந்தைகள் இலங்கை அரசிற்கு என்ன செய்தார்கள்? போன்ற கேள்விகளை இதன்போது எழுப்பினார்.
மேலும் இவ்வாறானதொரு நிலை எதிர்காலத்தில் வரக்கூடாது என்பதற்காகவே இந்த சிறுவர் தினத்தை கரிநாளாகவும் தங்களுக்கு சிறுவர் தினம் இல்லை எனவும் பிரகடப்படுத்திக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
இதன் போது இலங்கை அரசால் காணாமலாக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பாக நீதி கோரி மகஜர் ஒன்றை மின்னஞ்சல் ஊடாக ஐ.நா உயர் ஆணையாளளுக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சங்க உறுப்பினர்கள், சிறுவர்கள், ஊடகவியலார்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7