கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தொழிலை இழந்த 15,000 பேர் தொழில் திணைக்களத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.
கொரோனா தொற்றினால் மூடப்பட்ட அனைத்து நிறுவனங்களும் அரசாங்கத்தின் ஆலோசனைக்கு அமைய தற்போது தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளன.
ஆனாலும் சுமார் மூன்று மாதங்கள் மூடப்பட்டிருந்த நிறுவனங்களில், மீள செயற்பாடுகளை ஆரம்பிக்கும்போது பெருந்திரளான ஊழியர்கள் தொழிலை இழந்துள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் ஏ.ஜே.விமலவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தொழிலை இழந்த சுமார் 15,000 பேரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அனைவரினதும் தொழில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் எனவும் ஏ.ஜே.விமலவீர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)