LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, May 1, 2020

சென்னையில் 233 வீதிகள் முடக்கப்பட்டன- சென்னை மாநகராட்சி

தமிழ்நாடு, சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் மொத்தம் 233 தெருக்கள் முடக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைஸால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 323 ஆக அதிகரித்துள்ள நிலையில் சென்னையில் மட்டும் மொத்த பாதிப்பு 906 ஆகப் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி தலைமையின் அறிவிப்பில், சென்னை மாநகராட்சி முழுவதும் 233 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து சீல் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் ராயபுரம் பகுதியில் 56 தெருக்களும், திரு.வி.க.நகரில் 49 தெருக்களும், தேனாம்பேட்டை பகுதியில் 28 தெருக்களும் முடக்கப்பட்டுள்ளன.

இதனைவிட, தண்டையார்பேட்டையில்  25 தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7