LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, May 27, 2020

17 வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்து

தமிழகத்தில் புதிய தொழில் தொடங்குவது தொடர்பாக 17 வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டுள்ளார்.
குறித்த நிறுவனங்களுடன் 15,000 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலேயே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) கையெழுத்திட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக சரிவை சந்தித்துள்ள தொழில்துறையை மீட்டெடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தற்போதைய சூழலில் தமிழகத்தில் புதிய தொழில் தொடங்குவது தொடர்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், பின்லாந்து உள்ளிட்ட 17 வெளிநாட்டு நிறுவனங்களுடன் 15,128 கோடி ரூபாய் மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று கையெழுத்தானது.
இந்த புதிய ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்தில் 47,150 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்படுள்ளது.
17 திட்டங்களின் விபரம்:
திட்டம் – 01
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் 2,277 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும வகையில், ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த Daimler india commercial vehicles நிறுவனத்தின் கனரக வாகனங்கள் உற்பத்தி விரிவாக்கத் திட்டம்.
திட்டம் – 02
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா தொலைத்தொடர்பு சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 1,300 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 10,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில்,பின்லாந்து நாட்டினை சேர்ந்த சால்காம்ப் நிறுவனத்தின் கைப்பேசி உதிரி பாகங்கள் தயாரிப்பு விரிவாக்க திட்டம்.
திட்டம் – 03
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் 900 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த polymatech electronics நிறுவனத்தின் Semiconductor chips உற்பத்தி திட்டம்.
திட்டம் – 04
350 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 25,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தைவான் நாட்டைச் சேர்ந்த chung jye company limited மற்றும் aston shoes pvt ltd நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் காலணிகள் உற்பத்தி திட்டம்.
திட்டம் – 05
காஞ்சிபுரம் மாவட்டம், மப்பேடு பகுதியில் 400 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 5,800 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அவுஸ்ரேலிய நாட்டைச் சேர்ந்த  lai investment private limited நிறுவனத்தின், தொழிற்பூங்கா திட்டம்.
திட்டம் – 06
காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில் 150 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தென் கொரியா நாட்டைச் சேர்ந்த mando automotive india private limited  நிறுவனத்தின் casting facility திட்டம்.
திட்டம் – 07
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மஹிந்திரா தொழிற்பூங்காவில், 100 கோடி ரூபாய் முதலீட்டில்,சுமார் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த dinex  நிறுவனத்தின், வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம்.
திட்டம் – 08
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் 3,000 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 3,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் இந்திய இங்கிலாந்து கூட்டு Chennai power generation limited நிறுவனத்தின் இயற்கை எரிவாயு மூலம் 750 மெகாவாட் மின் உற்பத்தி திட்டம்.
திட்டம் – 09
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிப்காட் செய்யாறு தொழிற்பூங்காவில், 18 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 30 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த IGL india transplantation solution pvt ltd நிறுவனத்தின் உறுப்புகள் பதப்படுத்தும் இரசாயன உற்பத்தி திட்டம்.
திட்டம் – 10
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் 2,000 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தvivid solaire energy private limited   நிறுவனத்தின் காற்றாலை மின் உற்பத்தி விரிவாக்கத் திட்டம்.
திட்டம் – 11
சென்னை, அம்பத்தூரில் 2,800 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த  HDCI data holdings Chennai LLP நிறுவனத்தின் தகவல் தரவு மையம் திட்டம்.
திட்டம் – 12
சென்னையில் 1,500 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த ST tele media நிறுவனத்தின் தகவல் தரவு மைய திட்டம்.
திட்டம் -13
சென்னையில் 210 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 320 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த baettr நிறுவனத்தின் காற்றாலை உதிரி பாகங்கள் உற்பத்தி wind mill components திட்டம்.
திட்டம் – 14
காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பூங்காவில் 50 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 130 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும்
வகையில் சீன நாட்டைச் சேர்ந்த BYD india private limited நிறுவனத்தின் மின்சார வாகன உற்பத்தி திட்டம்.
திட்டம் – 15
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள  Mahindra origins தொழிற்பூங்காவில் 46 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தைவான் நாட்டைச் சேர்ந்த TJR precision technology company limited நிறுவனத்தின்precision components உற்பத்தி திட்டம்.
திட்டம் – 16
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில் 15 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 20நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த  pillar industries india private limited நிறுவனத்தின் sealing materials உற்பத்தி திட்டம்.
திட்டம் – 17
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மஹிந்திரா தொழிற்பூங்காவில், 12 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த Lincoln electric நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையம் துவங்கும் திட்டம்.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7