![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj05crGB1aISuWt_tiQp1KnWICLPQRcXUx632PlmjpY2D0MaLnSC4F2j1_Snj6_6yX03lp-9N69vQ-fo3z-00VD1rDKnhi-z6aWav8ZpFWtPjVubYQ0Wz09iRF63bujVrMObyub2cstAw4/s320/thattungal.com.jpg)
166 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 473 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு ஆயிரத்து 135 பேருக்கு நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் 72 பேர் உயிரிழந்துள்ளனர். 117 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 738ஆக அதிகரித்துள்ளது. 8 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 21 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமாகியுள்ளனர்.
தலைநகர் டெல்லியில் 669 பேரும், தெலுங்கானாவில் 427 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் முதன்முதலில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட கேரளாவில், தற்போது நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 345ஆக உள்ளது. இங்கு அதிகபட்சமாக 83 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 274 இல் இருந்து 5 ஆயிரத்து 734 ஆகவும், உயிரிழப்பு 149இல் இருந்து 166 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும் நோய்த் தொற்றில் இருந்து குணமானோர் எண்ணிக்கை 411இல் இருந்து 473ஆக உயர்ந்துள்ளது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)