LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, March 2, 2020

இலங்கை-காரைக்கால் கப்பல் போக்குவரத்துத் திட்டத்துக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை!

இலங்கை-காரைக்கால் இடையிலான பயணிகள்
கப்பல் போக்குவரத்துக்கு இந்திய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

ஆனால், இதற்கு தடைவிதிக்கவும், திட்டத்தை இரத்துச் செய்யவும் மத்திய அரசுக்கு புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளதை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உறுதி செய்துள்ளார்.

இலங்கை-காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவையை ஆரம்பிப்பதற்கு புதுச்சேரி அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தியிருந்தது.

இலங்கையிலிருந்து ஆன்மிகப் பயணமாக காரைக்கால், புதுச்சேரி, தமிழகப் பகுதிகளுக்கு ஏராளமானவர்கள் வர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இச்சூழலில் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை, மத்திய இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடந்த 27ஆம் திகதி புதுவை வந்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது, இலங்கை-காரைக்கால் இடையே கப்பல் போக்குவரத்துச் சேவையை தனியார் பங்களிப்புடன் மத்திய-மாநில அரசுகளின் ஆதரவோடு செயற்படுத்தப்படவுள்ளதாக அறிவித்தார்.

இந்நிலையில் இலங்கை-காரைக்கால் கப்பல் போக்குவரத்துத் திட்டத்தை இரத்துச் செய்ய மத்திய இணை அமைச்சருக்கு ஆளுநர் கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளதாக தகவல் பரவியது.

இதுகுறித்து முதல்வர் நாராயணசாமி கூறுகையில், “புதுச்சேரியில் பல திட்டங்களை டெல்லிக்குப் போய் கொண்டுவந்தாலும் ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து தடையாகதான் உள்ளார். இலங்கை-காரைக்கால் இடையே கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க கடந்த 2 நாட்களுக்கு முன்பு மத்திய அரசு அனுமதி தந்தது. ஆனால் இதற்குத் தடையை ஏற்படுத்தும் வகையில் ஆளுநர் கிரண்பெடி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார” என்று குறிப்பிட்டார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7