![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUJumtJDpsF2hu0jrNF9zmAIs1zwNcPTJVrxOubu0E8csXqH49Z5SpPeecYe1OMQLrAAYHaFCtvTm-dwF6V1Tre_CRg0XKS87cXRV9Cqvkf7QkqLt46gXF95szD34fwkcjUt-N-w4fJEw/s320/Thattunkal.com.jpg)
கல்லடி மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் உள்ள ஹாட்வெயார் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ காரணமாக மூன்று வர்த்தக நிலையங்கள் முற்றாக எரிந்துள்ளன.
இதுதொடர்பாக, மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைக்கும் பிரிவு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையை முன்னெடுத்தது.
இதன்போது, மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தில் கலகம் அடக்கும் பகுதியில் சேவையில் ஈடுபடுத்தும் நீர் அடிக்கும் வாகனமும் தீயினைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்தது.
மட்டக்களப்பு, மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் மற்றும் மாநகரசபை உறுப்பினர்களும் நேரடியாகச் சென்று தீயினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
குறித்த தீ ஏற்பட்டமைக்கான காரணம் தெரியாத நிலையில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)