LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, March 1, 2020

யாருடைய குடியுரிமையும் பறிபோகாது – அமித்ஷா விளக்கம்!

குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருடைய குடியுரிமையும்
பறிபோகாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து  ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,  ‘குடியுரிமை சட்ட திருத்தத்தால் சிறுபான்மையினரின் குடியுரிமை பறிக்கப்படும் என்று பகுஜன் சமாஜ்,  சமாஜ்வாதி,  கம்யூனிஸ்ட்,  காங்கிரஸ்,  மம்தா உள்ளிட்டோர் கூறி வருகின்றனர். அவர்கள் ஏன் பொய் கூறி வருகின்றனர்? குடியுரிமை சட்ட திருத்தம் என்பது யாருடைய குடியுரிமையையும் பறிக்காது.

அண்டை நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிறுபான்மை மக்களுக்கு குடியுரிமை வழங்கக் கூடாதா? அவர்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படக்கூடாதா? குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பொய்களை பரப்பி வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7