LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, March 1, 2020

தமிழகத்தின் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான திட்ட அறிக்கை தயார் – நிதின் கட்கரி

தமிழகத்தின் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்யும்
வகையில் கோதாவரி -காவிரி ஆறுகளை இணைப்பதற்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக  மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

புதுச்சேரியில் உள்ள மாநில தேசிய தொழில்நுட்ப கழகத்தின் 6 வது பட்டமளிப்பு விழா காரைக்கால் திருவேட்டக்குடியில் நடைபெற்றது. இதில்  கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ நீரின் முக்கியத்துவத்தை பூர்த்தி செய்யவும் கடலில் வீணாகும் 1200 டிஎம்சி தண்ணீரை தடுக்கவும் கோதாவரியில் இருந்து கடைமடைக்கு 60,000 கோடி ரூபாய் மதிப்பில் கிருஷ்ணா பெண்ணாறு வழியாக 1252 கிலோமீட்டரில் உபரி நீர் கொண்டு செல்லும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாராக உள்ளது.

மீத்தேன், எத்தனால்,  பையோ டீசல் ஆகியவைகளால் இயங்கும் 400 நவீன பேருந்துகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அரசுக்கு வருடத்திற்கு 60 கோடி ரூபாய் மிச்சமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7