LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, March 2, 2020

டெல்லி வன்முறை தொடர்பாக 885 பேர் கைது

வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறை
தொடர்பாக இதுவரை 167 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு இச்சம்பவம் தொடர்பாக 885 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என டெல்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பொலிஸார் கூறுகையில், “டெல்லி கலவரம் தொடர்பாக இதுவரை 167 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமார் 885 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளனர்.

தலைநகர் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்களில் 42 பேர் உயிரிழந்ததோடு, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

பதற்றம் நிறைந்த பகுதிகளில் ஆயுதம் தாங்கிய பொலிஸ் மற்றும் துணை இராணுவம் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வன்முறை தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேவேளை, வடகிழக்கு டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மவுஜ்பூரில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில் சென்று ஆய்வு நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7