![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVG9X49dD7PfQPc_TnMYL4EMHr5U1MqvLEb6HU0nN-kw1t5TgG7gH5WHZ5cB6JNy1HQnTVDphv0KckC2fhJmwPV4_0PVSk98Fy7dUOxYw5BnO-QwU_Rbzebtfpg8niNmiWejPU027H4i4/s320/Thattunkal.com.jpg)
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் வகையில் 144 தடை உத்தரவு காரணமாக பேருந்துகள் இயங்காத நிலையில், புதுக்கோட்டையில் உள்ள பணிமனையில், 200இற்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், ஒரு பேருந்தில், திடீர் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அங்கு நின்றிருந்த மேலும் 5 பேருந்துகளும் தீ பரவி அழிவை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, தீயணைப்புத் துறையினர் விரைச்து செயற்பட்டதால் ஏனைய பேருந்துகளுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)