![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZ8J4fYlgG62zwGGQkuZjuLw4LWPzKoo795rU-P6Zd7HT-G4WAGJHB3SRe3s-O8q06cpgUCoJ-Jo-_AodFX0J7Uwj1_lH3IILfY7NHHhtD-YbNE8l_FPxvTnD3h05UX-qSTYuOGG8Wq8s/s320/Thattunkal.com.jpg)
ஆய்வுகளுக்கான செயற்கைக்கோள், மார்ச் மாதம் 5ஆம் திகதி விண்ணில் ஏவப்படவுள்ளது.
இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜி-சாட்-1 செயற்கைகோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி – எப்10 ரொக்கெட், 14வது முறையாக விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின், இரண்டாவது ஏவுதளத்திலிருந்து, மார்ச்- 5ஆம் திகதி மாலை 5.43 மணிக்கு இந்த ரொக்கெட் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
இரண்டாயிரத்து 275 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள் புவியை கண்காணிக்காகவும், வானிலை தரவுகளை ஆய்வு செய்வதற்காகவும் விண்ணில் நிலை நிறுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)