LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, February 21, 2020

ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கை
சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இதன்படி குறித்த அவதூறு வழக்கினை நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கினை விசாரணை செய்யும் நீதிமன்றத்திற்கு மாற்றி இன்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு திண்டுக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஸ்டாலின், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவையும், அரசையும் விமர்சித்து கருத்து வெளியிட்டிருந்ததாக கூறி அவதூறு வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு தடை கோரி மு.க.ஸ்டாலின் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் குறித்த வழக்கிற்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7