LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, April 1, 2020

தமிழகத்தில் 7 நாட்களில் ஒரு இலட்சத்து 25ஆயிரம் பேர் கைது!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு அமுலில் உள்ளது.

இந்நிலையில், தற்போது வரை தமிழகம் முழுவதும் விதிமீறல்களில் ஈடுபட்ட ஒரு இலட்சத்து 25 ஆயிரம் பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு 7 நாட்கள் முடிந்துள்ள நிலையில், அவசர தேவைக்களுக்காக அல்லாமல் அநாவசியாமாக வெளியே சுற்றித் திரிபவர்கள் மீது தமிழக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் 7 நாட்களில், ஒரு இலட்சத்து 8 ஆயிரத்து 922 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், 85 ஆயிரத்து 850 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் வழக்குப் பதிவுசெய்யப்படடவர்கள் உட்பட ஒரு இலட்சத்து 25 ஆயிரத்து 793 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதோடு, 39 இலட்சத்து 36 ஆயிரத்து 852 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7