LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, February 29, 2020

தமிழக மாநிலங்களவைத் தேர்தல் அதிகாரியாக பேரவைச் செயலாளர் சீனிவாசன் நியமனம்

தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள
நிலையில் இதன் தேர்தல் அதிகாரியாக பேரவைச் செயலாளர் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகம் உட்பட 17 மாநிலங்களில் உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 26ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணையகம் அறிவித்திருந்தது.

தமிழகத்தில் மொத்தம் 18 மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளனர். இதில் குறிப்பிட்ட இடைவெளியில் 6 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள். இவர்களின் பதவிக் காலம் 6 ஆண்டுகள் ஆகும்.

2014ஆம் ஆண்டு தெரிவுசெய்யப்பட்ட 6 உறுப்பினர்களான திருச்சி சிவா, சசிகலா புஷ்பா, விஜிலா சத்யானந்த், முத்துக்கருப்பன், செல்வராஜ், டி.கே.ரங்கராஜன் ஆகியோரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

இதையடுத்து புதிய மாநிலங்களவை உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் தேர்தல் மார்ச் 26ஆம் திகதி நடைபெறுகிறது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களிக்கவுள்ளதால், தேர்தலில் வேட்புமனுத் தாக்கல், பரிசீலனை, தேர்தலை நடத்துவது உள்ளிட்டவற்றுக்காக சட்டப்பேரவைச் செயலர் சீனிவாசன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது தி.மு.க., அ.தி.மு.க. உறுப்பினர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட சமமாக இருப்பதால் இரண்டு கட்சிகளும் தலா 3 உறுப்பினர்களைத் தெரிவுசெய்ய வாய்ப்புள்ளது. ஒரு உறுப்பினரைத் தெரிவுசெய்ய 34 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும். அதன்படி தலா 3 உறுப்பினர்களை் போட்டியின்றித் தெரிவாக வாய்ப்புள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7