LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, January 14, 2020

எதையும் செய்ய முடியுமென நம்புங்கள்- இளைஞர்களுக்கு மோடி அறிவுரை

உங்களது திறமைகளை
வெளிப்படுத்துங்கள். எதையும் செய்ய முடியும் என நம்புங்கள் என இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை  வழங்கியுள்ளார்.

சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் தேசிய இளைஞர் தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் விவேகானந்தரின் 157ஆவது பிறந்தநாள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு ஐந்து நாள் தேசிய இளைஞர் தின கருத்தரங்கு உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நேற்று தொடங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை காணொளி மூலம் தொடங்கி வைத்த பிரதமர் மோடி இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர், “இன்று இளைஞர்கள் புதிய செயலிகளை உருவாக்குகிறார்கள். இது தனிநபர் வாழ்க்கையை எளிதாக்க உதவுகிறது.

மேலும் நாட்டில் மாறிவரும் வேலைவாய்ப்புகளின் தன்மைக்கு ஏற்ப இன்றைய இளைஞர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்குகிறார்கள்.துணிச்சலுடன் செயல்பட்டு, மற்றவர்களுக்கு வேலை வழங்குகிறார்கள்.

நமது அரசு இளம் மனநிலையுடனும் கனவுகளுடனும் உள்ளது. இளைஞர்களே உங்களது திறமைகளை வெளிப்படுத்துங்கள். உங்களால் எதையும் செய்ய முடியும் என நம்புங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7