LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, January 14, 2020

அணு மின் நிலையத்தில் அபாயத்தைக் குறிக்கும் தவறான எச்சரிக்கை: விசாரணை ஆரம்பம்!

கிழக்கு கனடாவைச் சேர்ந்த அனைத்து ஒன்றாரியோ
மாகாணத்தில் அமைந்துள்ள பிக்கரிங் அணுமின் நிலையத்தில், தவறான அபாயத்தைக் குறிக்கும் எச்சரிக்கை அலாரம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய அணு மின் நிலையங்களில் ஒன்றான, பிக்கரிங் கனடாவின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான டொறாண்டோவிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது,

மூன்று மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த பகுதியில், நேற்று காலை 7:30 மணிக்கு திடீரென எச்சரிக்கை ஒன்று வெளியிட்டது. இந்த எச்சரிக்கை மக்களிடம் பயத்தை ஏற்படுத்தியது.

இந்த அபாய எச்சரிக்கை பிக்கரிங் அணு உற்பத்தி நிலையத்தின் 10 கிலோமீட்டர் (ஆறு மைல்) சுற்றளவில் வசிக்கும் குடியிருப்பாளர்களை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், இது கிழக்கு கனடாவைச் சேர்ந்த அனைத்து ஒன்றாரியோ மாகாண வாசிகளுக்கும் சென்றது.

சுமார் ஒரு மணி நேரம் கழித்து, அணுசக்தி ஆலையை நிர்வகிக்கும் ஒன்ளாரியோ மின் உற்பத்தி நிறுவனம், அபாய எச்சரிக்கை தவறுதலாக வழங்கப்பட்டுவிட்டதாக டுவிட்டரில் அறிவித்தது.

இந்த நிலையில், பிக்கரிங் மேயர் டேவ் ரியான் உட்பட பல உள்ளூர் அதிகாரிகள் உடனடியாக இந்த சம்பவம் குறித்து விசாரணை கோரியுள்ளனர்.

இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிக்கரிங் மேயர் ரியான் கூறுகையில், ‘உங்களில் பலரைப் போலவே, அந்த அவசர எச்சரிக்கையைக் கேட்டு நான் மிகவும் பதற்றமடைந்தேன். உண்மையான அவசரநிலை இல்லை என்று நான் நிம்மதியாக இருக்கும்போது, இது போன்ற தவறு ஏற்பட்டது குறித்து நான் வருத்தப்படுகிறேன். நான் மாகாணத்துடன் பேசியுள்ளேன், முழு விசாரணை நடைபெற வேண்டும் என்று கோருகிறேன்’ என கூறினார்.

இதேவேளை ரொறன்ரோ மேயர் ஜோன் ரொறியும் விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7