LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, December 15, 2019

இடைநிறுத்தப்பட்ட நியமனங்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு டக்ளஸ் உறுதியளிப்பு

இடைநிறுத்தப்பட்டுள்ள பயிலுநர் செயற்திட்ட
உதவியாளர்களின் நியமனம் தொடர்பாக அமைச்சரவையில் எடுத்துரைப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள வடக்கு கிழக்கு பயிலுநர் செயற்திட்ட உதவியாளர்களின் பிரதிநிதிகளை இன்று (சனிக்கிழமை) சந்தித்த போதே அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

கடந்த ஆட்சியில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் ஜனாதிபதி தேர்தலுதக்கான திகதி அறிவிக்கப்பட்ட காலப் பகுதியில், வடக்கு கிழக்கைச் சேர்ந்த சுமார் 2500 பேர் உட்பட நாடளாவிய ரீதியில் சுமார் 7500 பேர் பயிலுநர் செயற்திட்ட உதவியாளர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

எனினும், குறித்த நியமனங்கள் தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் அமைந்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்த அனைத்து நியமனங்களும் இடைநிறுத்தப்பட்டன.

தற்போது புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில் இடைநிறுத்தப்பட்ட நியமனங்கள் தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளபடாமையினால் தாம் நிர்க்கதி நிலையில் இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் அமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர், கடந்த ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஏற்பட்ட பின்னடைவு காரணமாக எந்தவொரு விடயத்தையும் ஆணித்தரமாக பேச முடியாமல் இருப்பதாகவும், எனினும், அமைச்சரவையில் குறித்த நியமனங்கள் இடைநிறுத்தப்பட்டமையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை எடுத்துரைத்து சிறந்த தீர்வினை பெறுவதற்கு முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7