LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, December 20, 2019

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பீகாரில் ரயில் மறியல் போராட்டங்கள்!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பீகார்
மாநிலத்தில் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து பீகார் மாநிலத்தில் இன்று (வியாழக்கிழமை) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்பங்கா மாவட்டம் லகரிசராய் ரயில் நிலையத்திற்குள் திடீரென சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், அங்கு நின்றிருந்த ரயிலை புறப்பட விடாமல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல், பாட்னா ராஜேந்திர நகர் ரயில் நிலையத்தில் அனைத்து இந்திய மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்காங்கே இப்போராட்டத்தில் வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறுவதால், பதற்றமான பகுதிகளில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. அதேசமயம், இந்த சட்டம் தொடர்பாக, மத்திய அரசு ஜனவரி 22ஆம் திகதிக்குள் விரிவான விளக்க அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7