
அமைச்சின் செயலாளர்களை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
புதிய அரசாங்கத்தின் 2ஆவது அமைச்சரவைக் கூட்டம் நேற்று முன்னதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் யாப்பின் 44 (1) கீழ் புதிய முறையில் நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர்களுக்கான இராஜாங்க அமைச்சின் செயலாளர்களை நியமிப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
புதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் கடந்த 27ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
