
ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வாக்கு சீட்டுகள், வாக்கு பதிவுக்கான நேரம் குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது.
குறித்த அறிக்கையின்படி, காலை 7 மணியில் இருந்து மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேவேளை ஊராட்சிகளுக்கு நடைபெறும் உள்ளுராட்சி தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டின் வண்ணமும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி கிராம ஊராட்சி உறுப்பினர் பதவிக்கான வாக்குப்பதிவின் போது வெள்ளை அல்லது நீல நிற வாக்குச்சீட்டு பயன்படுத்தப்படவுள்ளது.
ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 9 வேட்பாளர்களுக்கு ஒரு வாக்குச்சீட்டு என்ற வகையில் அச்சிடப்படவுள்ளது.
தமிழ் அகர வரிசைப்படி வேட்பாளர்களின் பெயர் அச்சிடப்பட்டு அவரது பெயருக்கு அருகே தேர்தல் சின்னமும் அச்சிடப்பட்டு இருக்கும் என்று தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
