LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, October 26, 2019

ஜப்பானில் புயலைத் தொடர்ந்து கனமழை – மக்களை வெளியேறுமாறு உத்தரவு

ஜப்பானில் ஹகிபிஸ் புயலைத் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பாதுகாப்பு நடவடிக்கையாக சுமார் 80 ஆயிரம் பேரை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜப்பானில் 10 நாட்களுக்கு முன்னர் ஹபிகிஸ் புயல் தாக்கியதைத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள இடங்களில் உள்ள சுமார் 80 ஆயிரம் பேரை வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள இடங்களில் மீட்புப் பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக ஜப்பானில் வரலாறு காணாத பாதிப்பை ஹபிகிஸ் புயல் விட்டுச் சென்றது. இப்புயல் காரணமாக ஜப்பானின் கிழக்குப் பகுதி மிகுந்த பாதிப்புக்குள்ளாகியது.

சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் புயல் காரணமாக பாதிக்கப்பட்டதோடு, இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7