2018 ஆம் ஆண்டு மற்றும் 19 ஆம் ஆண்டிற்கானசொத்து அறிவிப்புகளை சமர்ப்பிக்கத் தவறியதால் எட்டு அமைச்சர்கள் மீது முறைப்பாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை இன்று (திங்கட்கிழமை) ஊழல் எதிர்ப்பு அமைப்பான இலங்கையில் உள்ள டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த முறைப்பாடுகள் அனைத்தும் நாளை இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமரிப்பு தெரிவித்துள்ளது.





