LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, August 1, 2019

ஐ.நா சபையின் கூட்டத்தில் உரையாற்றுகிறார் மோடி!

ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி உரையாற்றவுள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பொது சபை இன்று (வியாழக்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐ.நா. பொது சபை கூட்டத்தொடரில் பல்வேறு நாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.

அதன்படி செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உரையாற்றுகிறார். செப்டம்பர் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு தொடர்பான உச்சிமாநாடு நடைபெற இருக்கிறது.

இதனையடுத்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி நடைபெறும் 74ஆவது உலகத்தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

அவர் தனது நிவ்யோர்க்  பயணத்தின் போது பல்வேறு நாட்டுத் தலைவர்களை சந்தித்துப் பேசுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவ்யோர்க்  செல்லும்முன் செப்டம்பர் மாதம் 22ஆம்  திகதி ஹூஸ்டனில் அமெரிக்க வாழ் இந்தியர்களை சந்தித்து பிரதமர் மோடி கலந்துரையாடவுள்ளதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா. பொது சபைக் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு முதல்முறையாக பிரதமர் மோடி உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7