LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, August 4, 2019

ஜனாதிபதி தேர்தல் – ரணில் கோட்டா மோதல்?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் சார்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் சார்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க யானை சின்னத்திலும் கோட்டாபய ராஜபக்ஷ மலர் மொட்டு சின்னத்திலும் போட்டியிடுவார்கள் என அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி அந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஐ.தே.க. தமது பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரிலும் பொதுஜன பெரமுன தமது பங்காளிகளுடன் இணைந்து மற்றொரு கூட்டணியை அமைத்தும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளன.

ஐ.தே.க. கூட்டணியின் சார்பில் ரணில் விக்ரமசிங்க, கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச ஆகியோரின் பெயர்கள் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளன.

எனினும் ரணில் விக்ரமசிங்க போட்டியில் இருந்து விலகி, கரு ஜயசூரியவை நிறுத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதேவேளை, சஜித் பிரேமதாசவை வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு ஒரு பக்கம் தீவிர முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

அதேவேளை பொதுஜன பெரமுன கூட்டணியின் சார்பில், கோட்டாபய ராஜபக்ஷ நிறுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையிலேயே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் ஜனாதிபதி தேர்தலில் மோதவுள்ளதாக  ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.




 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7