![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiowAozpTRxr_3hmprj7pSxHiAXMUGHugVkqmWxbxmc5PC0s8C9FCsYooMJEVgK7mQ-teWI4etugols1KehUVwtj1w9bcux9IQT9b-F5LeRvJZ1DXzmkVRiGYaSmISVmDPPM4ZJV3l9Mf0/s640/%25E0%25AE%259A%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AE%25A3%25E0%25AF%258D-2-536-720x416.jpg)
குறித்த ஒளிப்படங்களை இஸ்ரோ இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதன்முறையாக வெளியிட்டுள்ளது.
சந்திரயான்-2 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள டு14 கெமராவால் எடுக்கப்பட்ட இந்த ஒளிப்படங்களின் மூலம் பூமியை இதுவரை கண்டிராத புதிய பரிமாணத்தில் பார்க்க முடிகிறது.
சந்திரனின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் கடந்த 22ஆம் திகதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
பூமியின் சுற்றுவட்டப் பாதையை கடந்து நான்காம் படிநிலைக்கு உயர்த்தப்பட்டு பயணித்துக் கொண்டிருக்கும் சந்திரயான்-2 எதிர்வரும் 20ஆம் திகதி சந்திரனில் தடம் பதிக்கவுள்ளது.
இந்த காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி மூலம் நேரடியாக பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)