
விலக்களிக்கும் தமிழக அரசின் இரு சட்ட வரைபுகளை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
நீட் தேர்வு குறித்து சென்னை உயர் நீதிமன்றில் நடந்த வழக்கு ஒன்றில் நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க கொண்டு வரப்பட்ட தமிழக அரசின் இரு சட்ட வரைபுகளே நிராகரிக்கபட்டதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டமை குறித்த விபரங்களை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி, இந்தியா முழுவதிலும் மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்து வக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக தேசிய தகுதிக்கான நுழைவுத்தேர்வு என்னும் ‘நீட்’ தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் நுழைவுத்தேர்வு கிடையாது. பிளஸ்–2 தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே இந்தப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடந்துவருகிறது. நுழைவுத் தேர்வு என்றால், கிராமப் புறங்களில் உள்ள ஏழை மாணவர்களுக்கு நிச்சயமாக இதுபோன்ற தேர்வு எழுதுவதற்கு பயிற்சியில்லாத நிலையில், மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைக்காது.
இந்த ஆண்டு உறுதியாக ‘நீட்’ தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டிய நிலையில், தமிழகத்தில் ஏறபட்ட கடுமையான எதிர்ப்பின் காரணமாக, தமிழக சட்டசபையில் கடந்த ஜனவரி 31ஆம் திகதி ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதற்காக ஒரு சட்ட வரைபு நிறைவேற்றப்பட்டு, அந்த வரைபு ஆளுநரின் ஒப்புதலையும் பெற்று, இப்போது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மத்திய அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நீட் தேர்வு குறித்து சென்னை உயர் நீதிமன்றில் நடந்த வழக்கு ஒன்றில் நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க கொண்டு வரப்பட்ட தமிழக அரசின் இரு சட்ட மசோதாக்கள் நிராகரிக்கபட்டதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
