LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, July 5, 2019

வரலாறு தெரியாமல் குற்றஞ்சாட்டும் ஆளுநர் – மாவை தெரிவிப்பு

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை
மீள ஆரம்பிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தடையாக இருப்பதாக ஆளுநர் கூறியிருக்கும் கருத்து பொய்யானது என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஆளுநருக்கு வரலாறு தொியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பலாலி விமான நிலைய புனரமைப்புப் பணிகள் அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) பலாலி விமான நிலைய வளாகத்தில் இடம்பெற்றிருந்தது. இங்கு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், “2016ஆம் ஆண்டு பலாலி விமான நிலையத்தின் புனரமைப்பு தொடர்பாகவும், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை தொடர்பாகவும் யாழ்ப்பாணம் வந்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசி சில தீர்மானங்களை எடுத்திருந்தோம்.

அதன்படி சீமெந்து தொழிற்சாலை அமைந்திருந்த காணியில் சுமார் 330 ஏக்காில் பாரிய தொழிற் பூங்கா ஒன்றை நிறுவுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கான அமைச்சரவை பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.

அதற்கமைய நடக்கவேண்டிய விடயங்கள் நடக்கும். மேலும் இந்திய பிரதமர் இங்கு வந்தபோது அவருடன் வந்த சிலர் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை இங்கு ஆரம்பிக்க கேட்டார்கள். ஆனால் சீமெந்து தயாரிப்பதற்கான சுண்ணாம்பு கற்களை இனிமேல், இங்கு அகழ முடியாது என்பதாலும், நிலத்தடி நீர் மோசமாக பாதிப்படையும் என்பதாலும், சுற்றுசூழலுக்கு பாதகம் என்பதாலும் அதனை நாங்கள் நிராகரித்தோம்.

அதற்குப் பதிலாக கிளிநொச்சி மாவட்டத்தில் கிராஞ்சி பகுதியில் சுண்ணாம்பு கல் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு, இப்போது மன்னார் பரப்புக் கடந்தான் பகுதியில் ஆய்வுகள் நடக்கின்றது. ஆகவே சீமெந்துத் தொழிற்சாலை அமைக்க நாங்கள் தடையாக இருக்கிறோம் என்பது பொய்யான தகவல் அல்லது ஆளுநருக்கு வரலாறு தெரியாது” என்று தெரிவித்தார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7