![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8c976uASsIhC9wPIRAXuNx-0fiwcONPyIXDfg8csSco_7nSj_-uD3BqS1MXaa1neX7iaAIDVEspWMCFaAyzFij-8B8WuK9NceZACI36m1f7PtiwAZuMCY58h2zDYe_tLTzb46r61z9TU/s640/Ambassador-Cheng-Xueyuan.jpg)
அத்துடன், இந்தக் கட்டுப்பாடுகள் இலங்கைக்கான சீன சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தெரிவிக்கையில், “இலங்கைக்கு வருகின்ற சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வருடாந்தம் சுமார் 3 இலட்சமாக இருக்கின்றது. இவ்வாறு இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் அதிகூடிய எண்ணிக்கையானவர்கள் சீனர்களே.
ஆனால் தாய்லாந்தினால் கவரப்படும் சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது இலங்கைக்கு வரும் சீனர்களின் எண்ணிக்கை சொற்பமே.
எனவே தாய்லாந்து போன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அவசியமான சௌகரியங்களை வழங்குவதில் இலங்கை கவனஞ்செலுத்த வேண்டும். மேலும் சீன சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருவதில் தற்போது காணப்படும் தடைகளைத் தளர்த்த வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)