
மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹரான் ஹாசிமுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
20 வயதான தாஜுதீன் அஹமட் என்ற சந்தேக நபரே மகரகம பிரதேசத்தில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடற்படை புலனாய்வுப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
